ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் நடந்த இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்களில் பெண் டிவி ஆர்ட்டிஸ்டை கொன்ற இருவர் உட்பட 4 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.
முன்னதாக, புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் உள்ள அகன்ஹன்சிபோரா பகுதியில் நேற்று இரவு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஒரு என்கவுன்டர் வெடித்தது. ஒரு நாள் முன்னதாக புட்காம் மாவட்டத்தில் தொலைக்காட்சி கலைஞர் அம்ரீன் பட் கொல்லப்பட்டதற்கு காரணமான இரண்டு தீவிரவாதிகளை தேடிவந்த நிலையில் இந்த தாக்குதல் தொடங்கியது.
பட்காமைச் சேர்ந்த ஷாஹித் முஷ்டாக் பட் மற்றும் புல்வாமாவைச் சேர்ந்த பார்ஹான் ஹபீப் என அடையாளம் காணப்பட்ட, தீவிரவாத இயக்கத்தில் புதிதாக இணைந்த இரண்டு உள்ளூர் பயங்கரவாதிகள் இருவரும் இந்த என்கவுட்டரில் வீழ்த்தப்பட்டனர்.
லஸ்கர் இ தொய்பா தளபதி லத்தீப்பின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் டிவி ஆர்ட்டிஸ்டை கொன்றதாக காஷ்மீர் மண்டலா ஐஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும், வீழ்த்தப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து 1 ஏகே 56 துப்பாக்கி, 4 மேகஸின்கள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டது என தெரிவித்தார்.
இதற்கிடையே ஸ்ரீநகர் நகரின் சௌரா பகுதியில் மற்றொரு என்கவுன்டர் வெடித்தது. அங்கு இரண்டு லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதன் மூலம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 நாட்களில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மற்றும் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 7 பேர் உட்பட 10 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மறைந்த ஆம்ப்ரீன் பாட்டின் கொடூரமான கொலை வழக்கு 24 மணி நேரத்தில் தீர்க்கப்பட்டது என்று விஜய் குமார் மேலும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…