India Trending News : விமானத்திற்குள் குட்கா எச்சில் துப்பிய கறையை சத்தீஸ்கர் ஐஏஎஸ் அதிகாரி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் பெரும்பாலும் வட மாநிலங்களில் மக்கள் பேருந்து ரயில்களில் செல்லும் போது பாக்கு வெற்றிலை குட்கா ஆகியவற்றை மென்று எச்சில் துப்புவது வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விமானத்திலும் ஜன்னலோர இருக்கையில் ஒருவர் உட்கார்ந்து குட்கா எச்சில் துப்பியுள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விமானத்தில் குட்கா எச்சில் கறையை பார்த்த சத்தீஸ்கர் ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன், ”எவரோ தன்னுடைய அடையாளத்தை விட்டு சென்றுள்ளார்” என புகைப்படத்துடன் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…