நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அரசு பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான் அதே பள்ளியில் படுக்கும் 11ம் வகுப்பு மாணவன். ஆனால், மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார்.
இந்த நிலையில், மாணவி காதலை ஏற்காததால் பள்ளி வளாகத்திற்கு அருகே அந்த மாணவிக்கு திடீரென மாணவன் தாலி கட்ட முயற்சி செய்துள்ளான். இதனை சுதாரித்துக் கொண்ட மாணவி கூச்சலிட்டப்படி, ஓடிய நிலையில் அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சேரன்மாதவே போலீஸார் சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் பெற்றோரை அழைத்து விசாரணை செய்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
சமீபத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரமே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…