Tamilnadu News Live : 2022-ம் ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுதவில்லை என வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இது குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அடுத்த மாதம் நடைபெறும் உடனடித் தேர்வில் அவர்களை பங்கேற்கும் விதமாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
எனவே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் அடுத்த மாதம் தேர்வு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…