Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோர விபத்து.. 11 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

Nandhinipriya Ganeshan September 15, 2022 & 10:39 [IST]
கோர விபத்து.. 11 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!Representative Image.

ஜம்மு - காஷ்மீர், பூஞ்ச் மாவட்டம், கலி மைதான் என்ற பகுதி நோக்கி நேற்று காலை மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. சாஜியன் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவம் அறிந்து விபத்து பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்து கவிழ்ந்ததில் 11 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீர் ஆளுநரான மனோஜ் சின்காவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்