இதற்கு தான் பாகுபலியை கட்டப்பா கொன்றார் என ஆதிபுருஷ் திரைப்படத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கலாய்த்துள்ளார்.
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வால்மீகி ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த திரைப்படம் கதப்பாத்திர உருவாக்கம், வசனங்கள், காட்சியமைப்புகள், தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட பலவகைகளில் விமர்சனங்களை எதிர்கொண்டது.
படத்தின் இயக்குநர் ஓம் ரெளத் திரைப்படம் ரீலிசாகும் நேரத்தில் அனுமனுக்கு தனி இருக்கை விட வேண்டும் என்ற கோரிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளது. இப்படம் இந்தியாவில், சர்ச்சை எழுப்பியது மட்டுமல்லாமல், நோபாளத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தை முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் சேவாக் சமீபத்தில் பார்த்துள்ளார். இதை தொடர்ந்து படம் குறித்து தனது டிவிட்டர், ஆதிபுருஷ் படத்தை பார்த்த பிறகு தான் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் எனத் தெரிகிறது என அவர் கலாய்த்து பதிவிட்டுள்ளது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…