சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புரா நகர் பகுதிகளில் இன்று காலை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையை அடுத்த கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், கோடம்பாக்கம், வள்ளூவர்கோட்டம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, பெருங்குடி, ஆயிரம் விளக்கு உட்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
மேலும் திண்டுக்கல், திருப்பூர், தேனி, கோவை, இன்று அதிக மழை பெய்ய உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவையில் இன்றும், நாளையும் அதிக கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவையில் இன்றும், நாளையும் அதிக கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு:
தூத்துக்குடி, கரூர், திருச்சி, சிவகங்கை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, 11 ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…