Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேலைக்கு சென்ற இடத்தில்...நரபலி கொடுக்கப்பட்டு...அழுகிய நிலையில் கிடந்த உடல்!

Priyanka Hochumin October 12, 2022 & 10:08 [IST]
வேலைக்கு சென்ற இடத்தில்...நரபலி கொடுக்கப்பட்டு...அழுகிய நிலையில் கிடந்த உடல்!  Representative Image.

தருமபுரியை சேர்ந்த பெண் கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி வந்துள்ளது. அதனை தொடர்ந்து விசாரித்த போலீசாருக்கு அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த பத்மா என்பவர் என்று தெரிய வந்தது.

இதற்கு மூல காரணமே போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் என்பவர் தான். வீட்டில் ஐஸ்வர்யமும், செல்வமும் பெறுக நரபலி கொடுக்க வேண்டும் என்ற அவரின் தவறான வழிகாட்டுதலில் பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் ரோஸ்லி என்பவருக்கு பத்து லட்சம் பணம் தருவதாக கூறி திருவல்லா அழைத்துச் சென்று சுமார் 22 துண்டுகளாக வெட்டி அவர்களின் வீட்டின் பின்னால் இருக்கும் துணி துவைக்கும் கல்லுக்கு அருகில் புதைத்து மஞ்சள் நாட்டி வைத்துள்ளனர். 
முதல் பலி வேலை செய்யாததால் அடுத்ததாக பத்மா என்பவரையும் அதே போல் பணம் கொடுப்பதாக கூறி அழைத்து சென்று நரபலி கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரின் குடும்பத்தினர் அளித்த புகாரால் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் போன் கடைசியாக காட்டிய இடம் மற்றும் சிசிடிவி காட்சிகள் வைத்து அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்