மலேசியாவில் நடைபெறவுள்ள 11வது உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்குமாறு தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மலோசியா நாட்டில் ஜூலை 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை 11வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த 3 நாள் மாநாட்டில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின்பேரில், உலகத் தமிழ் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இணைய வளர்ச்சி நிறைந்துள்ள காலகட்டத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து 11வது உலகத் தமிழ் மாநாட்டில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…