Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துப்பாக்கி முனையில்.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. காமுகர்கள் வெறிச்செயல்!!

Sekar June 11, 2022 & 15:24 [IST]
துப்பாக்கி முனையில்.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. காமுகர்கள் வெறிச்செயல்!!Representative Image.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் மைனர் சிறுமி ஒருவர் துப்பாக்கி முனையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 13ஆம் தேதி 12 வயது சிறுமி இருவரால் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தும், இதுவரை குற்றவாளிகள் இருவரையும் கைது செய்யவில்லை.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், ‘‘இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தேன். மே 13 அன்று இரவு துப்பாக்கி முனையில் எனது மகள் இருவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அவளை ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்." என்றார்.

அதிகாலை 4 மணியளவில் காட்டுக்குள் சிறுமியை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில், ‘‘இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளியை கைது செய்யவில்லை’’ என்று குற்றம் சாட்டினார்.

போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்