சென்னை: ப்ளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை சேர்ந்த ப்ளஸ் 2 மாணவி ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தாஸ் என்பவரிடம் வாங்கிய செல்ஃபோன் சார்ஜரை திரும்ப அளிப்பதற்காக சென்றார். அப்போது மாணவியை கத்தி முனையில் மிரட்டி தாஸ் பாலியல் பலத்காரம் செய்துள்ளார். மேலும், உடல் ரீதியான உறவில் ஈடுபட வருமாறு மீண்டும் அந்த மாணவியை தாஸ் அழைத்துள்ளார்.
நடந்ததை மாணவி தனது தாயிடம் கூறியதை அடுத்து, போலிசிடம் புகார் அளிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தாஸ் சாகும் வரை சிறையிலிருக்க வேண்டுமென ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏழு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, அபராத தொகையையும் சேர்த்து மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மாணவிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…