Tirupati Latest News : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை வசூல் மட்டும் 130 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்காக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்து மக்கள்வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், கோடை விடுமுறை என்பதால் தற்போது பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதிக்கு செல்கின்றனர். இதனால் திருப்பதியில் இலவச தரிசன வரிசையில் பல்லாயிர கணக்கான மக்கள் குவிந்து காணப்படுகின்றனர்..
இதனையடுத்து, கடந்த மாதம் ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை வசூல் மட்டும் 130 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே ஒரே மாதத்தில் 130 கோடி வசூலாவது முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் மட்டும் திருப்பதிக்கு 22.62 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் கடந்த மாதத்தில் பக்தர்களுக்கு 1.86 கோடி லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…