Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போபால்-டெல்லி சென்ற வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து

Baskaran Updated:
போபால்-டெல்லி சென்ற வந்தே பாரத் ரயிலில் தீ விபத்துRepresentative Image.

டெல்லி: போபாலில் இருந்து டெல்லி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி நாட்டின் 11 வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். போபால்-டெல்லி வரையிலான இந்த சேவை நாள்தோறும் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் இன்று அதிகாலை 5.40 மணிக்கு போபாலில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. காலை 8.30மணிக்கு குர்வாய் கெதோரா ரயில்நிலையம் வந்த போது, வந்தே பாரத் ரயிலின் 14 வது பெட்டியின் அடிப்பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதைப்பார்த்த பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து அலறியடித்துக் கொண்டு இறங்கினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில் பெட்டியின் அடியில் இருந்த பேட்டரியில் தீப்பற்றியதாகவும், உடனடியாக அணைக்கப்பட்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்