Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சந்தேகத்திடமான காரை வழிமறித்த போலீசார்; சோதனையில் திடுக்கிடும் திருப்பம்! 

KANIMOZHI Updated:
சந்தேகத்திடமான காரை வழிமறித்த போலீசார்; சோதனையில் திடுக்கிடும் திருப்பம்! Representative Image.

காரைக்குடி அருகேரூ 15 லட்சம் மதிப்புடைய  1500 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ரூ 2 லட்சத்து 13 ஆயிரம் பறிமுதல் செய்து போதை தடுப்பு  போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  அருகே நாச்சியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானகிரி பகுதியில் மாவட்ட எஸ்.பி செந்தில்குமார்  தலைமையிலான போதை தடுப்பு தனி பிரிவு  எஸ்.ஐ. பார்த்தீபன் மற்றும் போலீசார்  வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது சந்தேகத்திற்கிடடமாக வந்த காரை மறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக வாகனத்தில் இருந்தவர்கள் பதில் கூறியதை அடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை முழுவதுமாக சோதனை செய்ததில், வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கணேஷ், ஹான்ஸ், கூல் லலிப், விமல் போன்ற குட்கா புகையிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் மானகிரி அருகே உள்ள வீட்டில் புகையிலை மற்றும் பான் மசாலாக்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்தது  கண்டுபிடிக்கப்பட்டது.  மூட்டைகளில் கணேஷ் புகையிலை 940 கிலோ, கான்ஸ் 305 கிலோ, கூல் லிப் 135 கிலோ, விமல் பான் 70 கிலோ‌ மொத்தம் 1450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பொட்டலங்கள் இருந்தது.

இதன் மதிப்பு சுமார் ரூ 15 லட்சத்திற்கு மேல் இருக்கும் நிலையில் அவர்கள் வைத்திருந்த ரூ 2 லட்சத்து 13 ஆயிரத்து 600  ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததாக சாலிகிராமம் பகுதியை சேர்ந்த சரத்குமார், விக்னேஸ்வரன், சாக்கூர்  வினோத் கண்ணன் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி பெனாசிர்கான் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் புகையிலைப் பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் வசிக்கும் கோலாந்தி சுந்தரராஜன் மகன் சுரேஷ,  என்பவர் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நாச்சியாபுரம் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம், சார்பு ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்