திருவெண்ணெய்நல்லூர் அருகே நகைக்காக மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கைது செய்யப்பட்ட இளைஞரின் வாக்குமூலம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், அடுத்த மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்த இந்திராணி என்ற 75 வயது மூதாட்டி, கடந்த மாதம் 19ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த சிவசங்கர் என்ற 23 வயது இளைஞரால் கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியை அடித்துக் கொன்ற சிவசங்கர் அவரது சடலத்தை தனது வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவசங்கரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பெங்களூர் பகுதியில் தனிப்படை போலீசார் சிவசங்கரனை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூதாட்டி இந்திராணி கழுத்து மற்றும் காதில் அணிந்த நகைக்காக ஆசைப்பட்டு அவரை அடித்துக் கொன்றதாகவும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீட்டிற்குள்ளேயே சடலத்தை புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மூதாட்டி கொலைக்கு உடந்தையாக இருந்த சிவசங்கர் அம்மா குப்புவை கைது செய்துள்ள நிலையில், சிவசங்கரிடம் இருந்து 9 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…