Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரோலில் சென்ற 16 கைதிகள்....தலைமறைவு...போலீசார் அதிர்ச்சி.!

madhankumar July 13, 2022 & 19:41 [IST]
பரோலில் சென்ற 16 கைதிகள்....தலைமறைவு...போலீசார் அதிர்ச்சி.!Representative Image.

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பொது மக்கள் வெளியே நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் ஒன்றாகக் கூடும் இடங்களில் சமூக இடைவெளி பிரச்சினைகள் எழுந்தன.

இதனையடுத்து பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் எடுக்கப்பட்டு தேர்வுகள் இல்லாமல் அடுத்த வகுப்பிற்கு மாற்றப்பட்டனர். இதனையடுத்து சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் கொரோனா பரவும் அச்சம் உள்ளது என கூறி நூற்றுக்கணக்கான கைதிகளை சிறையில் இருந்து பரோலில் அனுப்ப முடிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் போது  உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறையில் இருந்து 39 கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட்டனர். உத்தரபிரதேச அரசு அவர்கள் அனைவரிடமும் மே 26-ம் தேதிக்குள் மீண்டும் சிறைக்கு திரும்பவேண்டுமென உத்தரவிட்டது. 

ஆனால் பரோலில் சென்ற 39 பேரில் 23 பேர் மட்டும் சிறை திரும்பியுள்ளனர் எனவும் மீதமுள்ள 16 பேர் சிறை திரும்பாததால் சட்டம் ஒழுங்கு சீரடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்ற எந்த தகவலும் இதுவரை தெரியாமல் சிறைத்துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கைதிகளின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியும் அவர்கள் எங்கு சென்றனர் என்ற தகவல் தெரியாத நிலை நீடித்து வருகிறது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்