Bihar Latest News : பீகாரில் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதன்படி, பீகாரில் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் 6 பேர், வைஷாலி மாவட்டத்தில் 3 பேர், பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2 பேர், முங்கர், மாதேபுரா மற்றும் கதிஹார் மாவட்டங்களில் ஒருவர் என மொத்தம் 17 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து பீகாரில் மாநில முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இடியுடன் கூடிய மழையின் போது பேரிடர் மேலாண்மை குழு வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். மக்கள் மோசமான வானிலையில் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…