ஐ. டி நிறுவனங்களை பொறுத்தவரை ஆட்குறைப்பு என்பது புதியதல்ல. ஆனால் 50000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது (Layoffs In India 2022) என்பது அதிர்ச்சியானது ஆகும்.
சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதிரடியாக நிறுவனத்தின் சி.இ.ஓ போன்ற உயர் பதவியில் இருந்த பணியாட்களை நீக்கினார். இதில் அதிகமான இந்திய ஊழியர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியானது.
மேலும், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிலும் சுமார் 11,000 ஊழியர்கள் அதிரடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு பல ஐ. டி நிறுவனங்கள் நடவடிக்கைக்கு எடுத்துள்ளது.
இந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் பல முன்னணி ஐ. டி நிறுவனங்கள் சில வாரங்களாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை 50,000 ஊழியர்களை ஐ. டி நிறுவனங்கள் பணி நீக்கம் செய்ததால் ஐ.டி ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…