Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெற்ற மகனையே போட்டுத்தள்ளிய பெற்றோர்கள்...காரணம் தெரியுமா.?

madhankumar July 23, 2022 & 19:00 [IST]
பெற்ற மகனையே போட்டுத்தள்ளிய பெற்றோர்கள்...காரணம் தெரியுமா.?Representative Image.

மதுரை மாவட்டம் சொக்கலிங்கம் நகரில் வசித்துவருபவர் நாகராஜன், இவரது மனைவி குருவம்மாள். இவர்கள் இருவரும் வீட்டின் அருகே கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இதில் இளையமாக மாரிச்செல்வம் (25) தொழிற்படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார், இது பெற்றோர்களிடையே பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் மது பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார்.

வேலைக்கு செல்லாத மகன் மாரி செல்வம், தொடர்ந்து மது குடிக்க பெற்றோரிடம் காசு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதே போல் நேற்று இரவும் அளவுக்கு அதிகமான மது குடித்து விட்டு தள்ளாடியபடி போதையில் மாரி செல்வம் வீட்டிற்கு வந்த நிலையில் பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் மாரிசெல்வம் பெற்றோரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் ஸ்கிப்பிங் விளையாடும் கயிற்றைக்கொண்டு மாரிச்செல்வதை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் மாரிசெல்வத்தை கொலை செய்தது குறித்து மதுரை எஸ். எஸ். காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் மாரி செல்வத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்