Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சீன எல்லையில் 19 பேர் மாயம்..! சீனாவுக்கு கடத்தப்பட்டார்களா?

Muthu Kumar July 19, 2022 & 16:00 [IST]
சீன எல்லையில் 19 பேர் மாயம்..! சீனாவுக்கு கடத்தப்பட்டார்களா?Representative Image.

இந்தியா சீனா எல்லையில் சாலை பணியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 பேர் மாயமாகியுள்ளனர். அதில் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணியில் ஈடுபட்ட 19 தொழிலாளர்கள் திடீரென மாயமாகியதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் ஒருவர் மட்டும் பிணமாக கிடைத்துள்ளார். மேலும், 18 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
மேலும், காணாமல்போன 18 சாலை பணியாளர்களை சீன ராணுவத்தினர் கடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்