நூபுர் சர்மாவை கொல்ல முயற்சி செய்த பாகிஸ்தானியரை கைது செய்த புலானாய்வுத்துறை அதிகாரிகள் , விசாரணை நடத்தி வருகின்றனர்.
நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை பேசிய பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மாவால் நாடு முழுவதும் பல இடங்களில் பதற்றமும் கலவரமும் ஏற்ப்பட்டது. இதனையடுத்து பாஜக தலைமை நுபுர் சர்மாவை பாஜகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதராவாக கருத்து தெரிவித்த ராஜஸ்தான் டெய்லரை மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில், இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுத் துறை உள்ளிட்ட முக்கிய அமைப்பின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…