Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி....பாட்டி வீட்டிற்கு சென்ற இடத்தில் சோகம்,..!

madhankumar July 03, 2022 & 13:08 [IST]
ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி....பாட்டி வீட்டிற்கு சென்ற இடத்தில் சோகம்,..!Representative Image.

கடலூர் மாவட்ட பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தில் பெரிய ஏறி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்கஇளம் நடிகர் புற்று நோயால் மரணம்...திரையுலகினர் அதிர்ச்சி..!

பூவனூர் கிராமத்தில் வசித்துவரும் கூலித்தொழிலாளி சிவபெருமாள் - கன்னியாகுமரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.  இதில் முதல் 2 மகள்களும்  பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் கிராமமான தமது பாட்டி ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்குச் சென்றனர். 

இதையும் படிங்க: தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு..! உஷரா இருங்க மக்களே..

நேற்று மாலை இவர்கள் இருவரும் ஏரியில் குளிக்க செல்வதாக கூறி சென்றனர், ஆனால் வெகு நேரம் ஆகியும் இருவரையும் காணவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர்,  உறவினர்கள் அவர்களை தேடத் தொடங்கினர். தீவிர தேடுதல் வேட்டையில்  திருமலை அகரத்தில் உள்ள பெரிய ஏரியிள் 17 வயது முத்துலட்சுமியும், 15 வயது சிவசக்தியும்  சடலமாக கிடந்துள்ளனர்.

இதனைக்கண்ட அதிர்ந்த உறவினர்கள் சிறுமிகளின் உடலை மீட்டு வந்துள்ளனர், இதனிடையே இந்த சம்பவம் குருதி அறிந்த பெண்ணாடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோவில் திருவிழாவிற்கு சென்ற சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்