சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கேமரா உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளடகு.
இன்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட இந்த தீவிபத்தால் 2 ஊழியர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த தீவிபத்து எதனால் நடந்தது என்ற குறித்த காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…