Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இறந்தவரின் உடலை சுமந்து சென்ற இருவர் ஆற்றில் மூழ்கிய பரிதாபம்..!

madhankumar June 27, 2022 & 13:21 [IST]
இறந்தவரின் உடலை சுமந்து சென்ற இருவர் ஆற்றில் மூழ்கிய பரிதாபம்..!Representative Image.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா  அன்னியூர் ஊராட்சியில்  உள்ள  பாகசாலை என்ற கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வருகிறானர்.  இங்குள்ள மக்களில் யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய இப்பகுதியில் உள்ள ஆற்றின் மறு கரையில் உள்ள மயானத்திற்கு செல்ல வேண்டும். 

இந்த ஆற்றில் கோடைகாலத்தில் தண்ணீர் இல்லாத காலத்தில் கூட எளிதாக ஆற்றை கடந்து உடலை மயானத்திற்கு எடுத்து செல்லலாம் அனால் மலை காலங்களில் எடுத்து செல்வதுதான் சிரமம். ஆற்றில் தண்ணீர்  வரும் மாதங்களில்  ஊரில் யாராவது இறந்தால் அவர்களின் உடல்களை அடக்கம் செய்வது பெரும் சவலான காரியமாக உள்ளது. 

ஆற்று நீரில் நீந்தி சென்று உடலை அடக்கம் செய்வது வாடிக்கையாகி விட்டது இதிலிருந்து விடுபட எங்களுக்கு உதவுங்கள் என ஊர் மக்கள் அனைவரும் ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்ததும் எந்த வித பலனும் இல்லை.  இந்நிலையில் நேற்று பாகசாலை கிராமத்தில் ஒருவர் இறந்த நிலையில் இன்று அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் சுடுகாட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால்  இறந்தவர் உடலை தூக்கி சென்ற இருவர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட மற்றவர்கள் உடனடியாக அவர்களை மீட்டதால் ஊயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் உடனடியாக இதற்கு மாற்று வலி அமைத்து தர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்