பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியாக கூறி இருவர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தியதில் இந்தியாவை 2047 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாமிய நாடாக மாற்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பீகார் சென்றிருந்த பிரதமர் மோடி சட்டசபை விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரை கொலை செய்ய சாதி செய்ததாக அத்தர் பர்வேஸ் மற்றும் முகமது ஜலாலுதீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதில் பல தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்புகள் உள்ளதாகவும், பாப்புலர் பிராண்ட் அமைப்பு மற்றும் எஸ்டிபிஐ மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி அமைப்பு ஆகியவற்றின் பரப்புரை நோட்டீசுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…