இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தொலைத்தொடர்புத்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை கைவசப்படுத்த அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், ரிலைன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் ஏலத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 26 ஆம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற்ற உள்ளது. அதன் லைசன்ஸை கைப்பற்ற பல நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 022ம் ஆண்டு நடைபெற உள்ள அலைக்கற்றை ஏலத்துக்கு 600 மெகாஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகாஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளுக்காக ஏலம் நடைபெற உள்ளது.
அதானி குழுமம் அலைக்கற்றையை ஏலத்திற்கு எடுக்கவும் அதனை தனியார் நெட்வொர்க் வசதியை வர்த்தகங்களான மின்சாரம் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் டேட்டா சென்டர்களில் பயன்படுத்தவும் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மூலம் ரூ. 4.5 லட்சம் கோடி நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு சேவையில்ஈடுபடாத அதானி குழுமம் அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பது விலையை நிர்ணயிப்பதில் பெரும் சவாலாக அமையும் என பொருளாதார தொழில்நுப்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…