Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

“ஹிஜாப் சரியாக அணியவில்லை”... கைது செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு…!

Gowthami Subramani September 17, 2022 & 11:50 [IST]
“ஹிஜாப் சரியாக அணியவில்லை”... கைது செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு…!Representative Image.

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத உடையான ஹிஜாபை சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் வகையில் ஈரான் நாட்டில் கடுமையான விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் படி, இந்த நாட்டில் 9 வயது சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன் படி, பெண்கள் தனது தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான உடையை அணிவது ஈரானில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இதனை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர் 22 வயதான மாஷா அமினி ஆவார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உடை தொடர்பான நெறிமுறைகளை அமல்படுத்தும் விதமாக இருப்பர். இந்த நிலையில் தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி என்ற பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் போலீசார் இடைமறித்துள்ளனர். அப்போது, மாஷா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி அவரை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வெளிவந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது, மாஷா அமினி தனது தலைப்பகுதியை ஹிஜாப் மூலம் முழுவதுமாக மறைக்கவில்லை எனக் கூறி கடுமையாக தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர். பின், தடுப்பு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று, அங்கும் மாஷாவைப் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், பலத்த காயமடைந்த மாஷா, போலீஸ் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் கோமா நிலைக்குச் சென்று விட்டதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், போலீசார் தாக்கியதன் காரணமாக கோமா நிலைக்குச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாஷா அமினி ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாததால், போலீசார் தாக்கியதில் கோமா நிலைக்குச் சென்ற மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்