உத்தராகன்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் மாவட்டத்தில், டிமாரி என்ற பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லால்தங் பகுதியில், திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக 40 பேர் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இதில், திருமணம் முடிந்து நேற்று இரவு அனைவரும் பேருந்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இவ்வாறு சென்று கொண்டிருந்த சமயத்தில் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள டிமாரி என்ற கிராமத்திற்கு அருகே சென்ற போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 25 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதில் பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டதால், பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும், காலை நேரத்தில் துரிதமாக நடைபெற்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். திருமண நிகழ்விற்கு சென்று திரும்பிய போது ஏற்பட்ட இந்த விபத்து, அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…