Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஏசி-க்குள் புகுந்த சாரைப்பாம்பு....பத்திரமாக மீட்பு..!

madhankumar July 14, 2022 & 19:18 [IST]
ஏசி-க்குள் புகுந்த சாரைப்பாம்பு....பத்திரமாக மீட்பு..!Representative Image.

கடலூரில் ஏசிக்குள் புகுந்த பாம்பால் மிரண்டு போன குடும்பத்தினர் பாம்பு ஆர்வலரான செல்லாவை அழைத்து அந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டனர்.

கடலூர் மாவட்டம் செமண்டலம் பகுதியில் வசித்துவரும் அரவிந்த் என்பவரது வீட்டில் உள்ள ஏசியில் இருந்து சத்தம் வந்துகொண்டே இருந்துள்ளது. எலி எதாவது உள்ளே புகுந்திருக்கலாம் என நினைத்த அவர் ஏசியில் பாம்பு தோல் உரித்ததற்கான அடையாளம் இருந்ததை பார்த்துள்ளார். பின்னர் ஏசி மெக்கானிக்கை அவர் அழைத்தார். ஏசியை வந்து பார்த்த ஏசி மெக்கானிக் அந்த ஏசிக்குள் பாம்பு இருப்பதை கண்டுபிடித்தார்.

இதனையடுத்து பாம்புப்பிடி வீரரான செலவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த அவர் ஏசி மெக்கானிக் உதவியுடன் ஏசியை பிரித்து பார்த்தபோது அதில் 3 அடி நீள சாரைப்பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பாதுகாப்பாக பிடித்து காட்டில் விட்டார் செல்லா.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்