கூடலூரில் பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையால் 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், அதே போல் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் தொடர் மழை காரணமாக நான்கு தாலுகா பள்ளிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக கூடலூர் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் காற்றின் தாக்கம் இருக்கும் என்பதால் மரங்கள் தடுப்பு சுவர்கள் அருகில் நிற்க வேண்டாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…