சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொறுத்த பட்டிருத்த சிசிடிவி கேமராவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு தப்பியோடிய 3 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உள்ளகரத்தில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர், இதனையடுத்து குடியிருப்புவாசிகள் சத்தமிட்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, குடியிருப்பின் பக்கவாட்டு சுவரின் மீது நடந்துவந்து, சிசிடிவி கேமராவுக்கு முத்தமிட்டு சென்றது தெரியவந்தது.
போதையில் சுற்றித்திரிந்த அவர்கள் கொள்ளையர்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என மடிப்பாக்கம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…