கோவையில் இரு வேறு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியம் தொந்தரவு கொடுத்த புகாரில் 3 ஆசிரியர்கள் கைது செய்யபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு உடற்கல்வி அசிரியராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவிகள் அவர்களின் பெற்றோர்களிடம் இது குறித்து கூறினர், இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், கடந்த வெள்ளிக்கிழ்மை பள்ளி முன்பு திரண்டு, ஆசிரியர் பிராபாகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீசார், முற்றுக்கையில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பள்ளியில் 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார், மேலும் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, ஆசிரியர் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், பொள்ளாச்சி அருகே உள்ள பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக உள்ள பாலசந்திரன் என்பவரும் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் ராமகிருஷ்ணன் என்பவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும், அப்பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…