கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் தினமும் நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் திருச்சி, சேலம், கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், சென்னை, மதுரை, உள்ளிட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன இந்த நிலையில் இன்று இரவு சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்தை பண்ருட்டி பகுதியை சேர்ந்த துளசிராஜன் ஓட்டுநர் இயக்கி வந்தார். அந்த பேருந்து விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது, திடீரென இளைஞர் ஒருவர், நடத்துனர் சுகுமார் பையில் இருந்த திடீரென்று 6,700 ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு ஓட ஆரம்பித்துள்ளார்.
உடனே அங்கிருந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை பிடித்ததோடு, தர்ம அடி கொடுத்து விருத்தாசலம் புற காவல் நிலையத்தில் அந்த இளைஞரை ஒப்படைத்தனர் அந்த இளைஞருக்கு தலையில் காயம் இருந்ததால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த இளைஞர் மது போதையில் இருப்பதால் அவரிடம் எந்த விசாரணையும் போலீசார் நடத்தவில்லை விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் நடத்துனரிடம் இருந்து பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…