தனது மனைவியின் தங்கையின் மீதான தீரா காதல் காரணமாக மந்திரித்த நீரை அவர் மீது ஊற்றி அவரை வசியம் செய்ய முயற்சித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், பூங்குளம் செட்டிவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 23), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி (வயது 21) என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன நாள் முதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுவந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனிடையே ராஜேஷுக்கு அவரது மனைவியின் 19 வயது தங்கை மீது காதல் ஏற்பட்டுள்ளது, தனது காதலியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என நினைத்த ராஜேஷ், கடந்த 27 ஆம் தேதி இரவு நேரத்தில் சாலையில் நடந்துவந்துகொண்டிருந்த மனைவியின் தங்கையை வழிமறித்து அவர் மீது திரவம் போன்ற ஒன்றை ஊற்றியுள்ளார்.
அப்போது தன் மீது ஆசிட் தான் ஊற்றுகிறார் என நினைத்து அந்த பெண் அலறியுள்ளார், இதனால் அக்கம் பக்கத்தினர் வந்துவிடுவார்கள் என பயந்த ராஜேஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையயடுத்து உடல் முழுவதும் எரிச்சலாக இருப்பதாக இருப்பதாக கூறியதால் அவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் மீது பட்டது ஆசிட் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ மனையில் இருந்து வெளியே வந்த அந்த இளம்பெண் ஆலங்காயம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார், அதன்படி புகாரை பெற்று வழக்கு பதிவு செய்த போலிஸார் ராஜேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவியின் தங்கை மீது காதல் வசப்பட்டு அவரை மயக்கி வசியம் செய்ய மந்திரித்த தண்ணீரை ஊற்றியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராஜேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…