மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3 வயது சிறுமி நர்சரி வகுப்பு பயின்று வந்துள்ளார். அந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, சிறுமிக்கு யாரோ மாற்று ஆடையை அணிவித்து அனுப்பியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்க, பள்ளியில் வைத்து சிறுமியின் ஆடையை யாரும் மாற்றவில்லை என்று கூறியுள்ளனர்.
பின்னர், சிறுமிக்கு உடம்பு சரியில்லாமல் போக, சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த தகவலை கேட்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் அந்த சிறுமியை பள்ளி பஸ் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளிக்க, அந்த பஸ் டிரைவரை கைது செய்துள்ளனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த பள்ளி பஸ்ஸில் வேலை செய்த ஒரு பெண் ஊழியரையும் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில் ஷாபுரா பகுதியில் அமைந்த, பள்ளி பேருந்து ஓட்டுனரின் வீட்டை போலீசாரின் கண்காணிப்பின் கீழ் அதிகாரிகள் இடித்து தள்ளினர். சட்டவிரோத கட்டுமானம் என கூறி அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீப காலமாகவே சிறு குழந்தைகளை சீரழிக்கும் விதமான சம்பவங்கள் அங்காங்கே நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…