Tirupati Latest News : திருப்பதியில் இன்று காலை வெளியிட்ட 300ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், கால விரயத்தை குறைக்கவும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தானத்தால் விற்பணை செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், திருப்பதியில் கடந்த மாதத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்ட 300ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியான சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிட்டனர்.
இந்த டிக்கெட்களி தினமும் 20,000 பக்தர்களுக்கு வழங்கும் வகையில் செப்டம்பர் மாதத்திற்கான 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதால் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெறுவதில் அதிக அளவில் பக்தர்கள் வாங்குவதில்லை.
இந்நிலையி, கடந்த சில மாதங்களில் 300ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 2 மணி நேரத்தில் விற்பணை முடிந்துவிடும். ஆனால் இன்று காலை வெளியிடப்பட்ட 300ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…