Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு...பீதியில் மக்கள்..!

madhankumar July 07, 2022 & 14:38 [IST]
இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு...பீதியில் மக்கள்..!Representative Image.

இந்தியாவில் ஓமிக்கிரானின் புதிய வகை தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெட்ரேயஸ் கூறும்போது,

கொரோனா தொற்று கடந்த இரண்டு வாரங்களில் உலக அளவில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிஏ.4 மற்றும் பிஏ.5 அலைகள் எழுந்துள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் ஏபி.2.75 என்கிற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 

ஒரு புதிய வைரஸ் தோன்றினால் அது முந்தயத்தை விட வித்தியாசமானதாக இருந்தால் அது தனி மாறுபாடு என அழைக்கப்படும். மேலும் நாம் இன்னும் நோய் தொற்றுக்கு மத்தியில் தான் இருக்கிறோம் வைரஸூக்கு நிறைய சக்தி உள்ளது. எனவே அது பிஏ.4 அல்லது பிஏ.5 அல்லது பிஏ.2.75 ஆக இருந்தாலும், வைரஸ் தொடரும்.

அதனால் மக்களும் சமூகத்தில் உள்ளவர்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்