விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே இருக்கும் செயல்படாத கல்குவாரிக்கு குளிக்க செல்லலாம் என முடிவெடுத்து சென்றுள்ளனர். பின்னர் குட்டையில் இறங்கி குளித்துக்கொண்டிருக்கையில் ஒருவர் நீரின் உள்ளே மூழ்கியபோது அவரை காப்பாற்ற சென்ற மற்றவர்களும் வரிசையாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவ்வாறு குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களான புஷ்பா, வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகிய அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் நேற்றைய தினம் குடும்ப தகராறில் தான் பெற்ற 6 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், விழுப்புரத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…