Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

4 பெண்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளைஞர்.. பஞ்சாபில் பகீர்..

Nandhinipriya Ganeshan Updated:
4 பெண்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளைஞர்.. பஞ்சாபில் பகீர்..Representative Image.

ஜலந்தரில் உள்ள ஒரு பேக்டரியில் பணியாற்றி வரும் நபர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு லெதர் காம்ப்ளக்ஸ் சாலைவழியாக வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த 4 பெண்கள், அவரிடம் முகவரி கேட்பது போல கேட்டு, அவரது முகத்தில் வாசனை திரவியத்தை அடித்து, காரில் தூக்கி போட்டு கொண்டு வேகமாக சென்றுள்ளனர். பின்னர், பல மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்தபோது, உடலில் ஆடைகள் இல்லாத நிலையில் கட்டிப்போடப்பட்டிருந்து தெரியவந்தது. 

அவரை கட்டி போட்டு ஆடைகளை கழற்றி அந்த 4 பெண்களும் இரவு முழுக்க அவருடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிகிறது. சுமார் 11 - 12 மணி நேரம் அந்த இளைஞரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, பின்னர் அந்த 4 பெண்களும் அவரை காரில் அழைத்து கொண்டு அதிகாலை 3 மணியளவில் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, உடலில் ஆடைகள் இல்லாமல் வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு, இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கூறியுள்ளார். அப்போது, அந்த 4 பெண்களுக்கும் 22 முதல் 23 வயது வரை இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆனாலும், இதுவரை போலீஸில் புகார் எதுவும் கூறப்படுகிறது. 

பொதுவாக பெண்களையும் சிறுமிகளையும் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து வரும் நிலையில் ஆண் ஒருவரை பெண்கள் கடத்தி கூட்டாக பலாத்காரம் செய்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும் படிக்க:- Punjabi Boy Raped : பஞ்சாபில் இளைஞனை பலாத்காரம் செய்த 4 பெண்கள்....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்