கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திருப்பத்தூர் நகர பாஜக துணைத் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி கிராமம் அருகே விவசாய நிலத்தில் திருப்பத்தூரை சேர்ந்த கலிகண்ணன் ( வயது 52) என்பவர் தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் கலைநகர் பகுதியைச் சேர்ந்த இவர், தண்ணீர் கேன் மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். திருப்பத்தூர் நகர பாஜக துணைத் தலைவராக உள்ள கலிகண்ணன், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே கலிகண்ணன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என இரண்டு வெவ்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…