Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மக்களே உஷார்; மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா!

Editorial Desk Updated:
மக்களே உஷார்; மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா! Representative Image.

இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 601 ஆக அதிகரித்துள்ளது. 

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 5 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்