இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 601 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 5 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 34 ஆயிரம் பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…