உண்டியலில் காயின்களை போடுவதைப் போல், ஒருவர் தனது வயிற்றில் காயின்களை போட்டு வந்த நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் ரெய்ச்சூர் மாவட்டம் சந்தே கெளூரு கிராமத்தைச் சேர்ந்த 58 வயதான தியாமப்பா ஹரிஜன், நீண்ட நாட்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது.
இதற்காக எவ்வளவோ வைத்தியங்கள் செய்தும் எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், இவர் 5 ரூபாய் நாணயம் ஒன்றை குடும்பத்தினர் பார்த்துவிட்டனர். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து, அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது, வயிற்றில் 100க்கும் மேற்பட்ட நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, நேற்று அவரது வயிற்றை கிழித்து அறுவை சிகிச்சை செய்து நாணயங்களை வெளியில் எடுத்தனர். இதில் ரூ.5 நாணயங்கள் 56ம், ரூ.2 நாணயங்கள் 51ம் ஒரு ரூபாய் நாணயங்கள் 80ம் அகற்றப்பட்டன. இவற்றின் மொத்த எடை 1.2 கிலோ ஆகும்.
இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு தியாமப்பா நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…