Iran Latest News : ஈரான் தெற்கு பகுதியில் உள்ள அபடானில், 10 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கட்டிட விபத்து
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவசரகால குழுக்கள் சம்பவ பகுதிக்கு விரைந்தனர். அந்த குழுவில் 2 மோப்ப நாய், ஒரு ஹெலிகாப்டர் உட்பட 7 மீட்பு வாகனங்கள் சென்றுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் நகர அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைதிபடுத்திய அதிகாரிகள் மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறனர்.இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
பலி எண்ணிக்கை
விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் வணிக கடைகள் மற்றும் குடியிருப்புவாசிகளும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 80 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை’
இச்சம்பவம் குறித்து விரைவில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குஜஸ்தான் மாகாண நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் அடிபடையில், இடிந்த கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…