பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஜான்சனுக்கு ஒரு பெரிய அடியாக, நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக் உட்பட அவரது இரண்டு மூத்த அமைச்சரவை சகாக்கள் நேற்று ராஜினாமா செய்தனர்.
42 வயதான இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் மற்றொரு மூத்த அமைச்சரவை சகாவான இங்கிலாந்து சுகாதார அமைச்சரும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவருமான சஜித் ஜாவித் ராஜினாமா செய்த உடனேயே வெளியிட்டார்.
ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய அமைச்சர்களின் பதவி விலகல் போரிஸ் ஜான்சனின் தலைமைக்கு ஒரு பெரிய அடியாக இருக்கும் என பிரிட்டிஷ் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே அந்நாடு வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியிலும், கொரோனாவால் சுகாதார நெருக்கடியிலும் உள்ள நிலையில் போரிஸ் இதை எப்படி சமாளிப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
"அரசாங்கம் முறையாகவும், திறமையாகவும், தீவிரமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்று ராஜினாமாவுக்கு பின் ரிஷி சுனக் ட்வீட் செய்துள்ளார்.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தனது ராஜினாமா கடிதத்தில், "நாங்கள் [கன்சர்வேடிவ் கட்சி] எப்போதுமே பிரபலமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தேசிய நலனுக்காக செயல்படுவதில் நாங்கள் திறமையானவர்கள். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்கள் பக்கம் நாங்கள் இப்போது இல்லை என்று நினைப்பதால் இந்த முடிவை எடுக்கிறோம்." என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…