Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பைக்ரேசால் பறிபோன பெண் உயிர்....செங்கல்பட்டில் நடந்த சோகம்..!

madhankumar June 12, 2022 & 16:54 [IST]
பைக்ரேசால் பறிபோன பெண் உயிர்....செங்கல்பட்டில் நடந்த சோகம்..!Representative Image.

செங்கல்பட்டு மாவட்டம்  வண்டலூர் வெளிவட்ட பாதையில், பைக் ரேஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இந்த ரேசில் சிக்கிய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக  உயிரிழந்தார்

சென்னை வெளி வட்ட சாலைகளான ஈசிஆர் சாலை, ஓஎம்ஆர்சாலை, வண்டலூர்  மற்றும் மீஞ்சர் சாலைகளில் கடந்த சில நாட்களாகவே இளைஞர்கள் விதிமுறைகளையும் மீறி பைக் ரேஸ்கள் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து பல புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பையும் மீறி இன்று காலை 9 மணியளவில் 3 இளைஞர்கள்  வண்டலூர் -மீஞ்சூர் சாலையில் பைக் ரேஸ் சாகசத்தில் ஈடுபட்டனர்.மணிக்கு 100 முதல் 150 வேகத்தில் இருசக்கர வாகனங்களில் 3 இளைஞர்களும் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது.  

அப்போது அந்த சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சென்றுகொண்டிருந்துள்ளார். அவர் மீது நவீன் என்கிற இளைஞர் தன்னுடைய பைக்கால் பலமாக மோதினார். அதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.  

பைக்கை ஓட்டி வந்த நவீனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது, மேலும் அவர் பின்னல் அமர்ந்துவந்த விஷவா என்ற இளைஞருக்கு காய் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரேஸில் ஈடுபட்ட மற்ற இரண்டு இளைஞர்களை தேடிவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்