Nepal Earthquake: நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இன்று அதிகாலை 1.57 அளவில் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த திடீர் நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன்பு நேற்று காலையும் 4.5 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இரவு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் நில அதிர்வை உணர்ந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோன்று கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியும் 5.1 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜூலை 31 ஆம் தேதியும் 6.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. தொடர்ந்து ஒரே இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுவருவதால், நேபாள மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…