ஆணாக மாறி ஆசிரியை ஒருவர் தனது மாணவியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், தீக் நகரில் மீரா என்பவர் வசித்து வருகிறார். இவர், நாக்லாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அதே பள்ளியில் படிக்கும் கல்பனா என்ற மாணவியுடன் காதல் மலரத் தொடங்கியது.
இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் இருவருமே காதலித்து வந்துள்ளனர். இதற்கு அடுத்த கட்டமாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இருவருமே பெண் என்பதால், பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டனர். இதனையடுத்து, மீரா தனது பாலினத்தை ஆணாக மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளார். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, சிகிச்சை எடுத்து ஆணாக மாறிய மீரா, கடந்த நவம்பர் 4 ஆம் நாள் கல்பனாவை திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டாளர்களும், இவர்களது திருமணத்தை ஏற்று, இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து ஆணாக மாறிய மீரா கூறியதாவது,”காதலில் எல்லாமே நியாயம் தான்.. அதனால் தான் எனது பாலினத்தை மாற்றிக் கொண்டேன்” எனக் கூறினார். ஆணாக மாறிய இவர் தனது பெயரை ஆரவ் என மாற்றிக் கொண்டார். மேலும், இவர் பெண்ணாக பிறந்திருந்தாலும் தன்னை ஆணாகவே உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.
மேலும் திருமணம் குறித்து கல்பனா பேசுகையில்,“ஆரம்பத்தில் இருந்தே நான் அவரை காதலித்து வந்தேன். அவர், ஆணாக மாறுவதற்கான சிகிச்சையை செய்யாமல் இருந்திருப்பினும் நான் அவரை திருமணம் செய்திருப்பேன்” எனக் கூறியுள்ளார். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் கல்பனா மாநில அளவிலான கபடி வீராங்கனை ஆவார். இவர் 2023 ஆம் ஆண்டில் துபாயில் நடைபெற உள்ள சர்வதேச கபடி போட்டியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…