Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,056.07
-283.37sensex(-0.38%)
நிஃப்டி22,487.10
-83.25sensex(-0.37%)
USD
81.57
Exclusive

அடுத்த 2 மணி நேரம்.. அடிச்சுத் தூக்கப் போகுது.. உஷார் மக்களே.. இந்த மாவட்டங்களில் மட்டும்..!!

Sekar Updated:
அடுத்த 2 மணி நேரம்.. அடிச்சுத் தூக்கப் போகுது.. உஷார் மக்களே.. இந்த மாவட்டங்களில் மட்டும்..!!Representative Image.

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலி ,தென்காசி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தவிர, கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், நாளை மறுதினம் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.  

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும்,  நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்