வரும் டிசம்பர் 5 ஆம் நாள், வங்கக் கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால், காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரனமாக, இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரியில் கனமழை வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர் பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. படிப்படியாக வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறும் எனவும், இதனால் இன்று முதல் 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…