தாய்லாந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி 60 இந்தியர்களை மோசடி கும்பல் ஒன்று மியான்மரில் சிக்கவைத்துள்ளது.
வெளிநாட்டு வேலை என்றாலே மோகம். அதிக சம்பளம், ஆடம்பர வாழ்க்கை கொஞ்ச காலம் கஷ்டப்பட்டா போது வீடு, பங்களா கார் என செட்டில் ஆகி விடலாம் என்கிற ஆனந்தம். இந்த ஆசையை மோசடி கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இவர்களிடம் பணம் பறித்துவிட்டு நட்டாத்தில் விட்டுவிட்டு பறந்துவிடுகின்றனர்.
உலகம் முழுக்க பல மோசடி கும்பல் இப்படி இயங்கி வருகின்றன. அதில் ஒரு கும்பல்தான், இப்போது 60 இந்தியர்களை மியான்மர் நாட்டில் சிக்க வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டது.
தாய்லாந்தில் ஐடி ஊழியர்களுக்கு நல்ல வேலை நல்ல சம்பளம் என ஆசைக் காட்டி சொகுசு வாழ்க்கை வாழலாம் என கூட்டிச் சென்று பணம் பறித்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர். அதிலும் மியான்மரில் உள்நாட்டு பிரச்னை நடக்கும் கலகக் குழுக்கள் வாழும் பகுதியில் இவர்களைச் சிக்கவைத்துள்ளது.
இந்திய அரசும், மியான்மர் அரசும் இவர்களை மீட்கும் பணி குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…